பெண்களின் அரசியல் பிரவேசம்

இன்றைய அளவிலே முக்கியமாக பேசப்பட்டு வரும் ஒரு விடயமாக ஒரு கருத்தியலாக பெண்ணியவாதம் அல்லது பெண்களின் உரிமைகள் மற்றும் ஆண் பெண் சமத்துவம் தொடர்பாக பரவலாக பேசப்படுகின்றது. இவ் எண்ணகருவானது மேற்கத்தேய நாடுகளை பொறுத்தவரையில் சற்று பழைய விடயமாயின் மூன்றாம் உலக நாடுகளை பொறுத்தவரையில் ஆண் பெண் சமத்துவம் என்பது இன்னும் கேள்விக்குரியதாகவே உள்ளது அந்த வகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசியல் சமூக பொருளாதார கலாச்சார மற்றும் அனைத்துவிதமான துறைகளிலும் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனினும் பல்வேறு சமூக அரசியல் பொருளாதார கலாச்சார மற்றும் மூடநம்பிக்கைகள் காரணமாக பெண்கள் இரண்டாம் தர நிலையிலேயே இன்னும் வைத்துப் பார்க்கப்படுகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது அந்தவகையில் பெண்களின் உரிமைகளுள் முக்கியமான ஒரு அம்சமாக பேசப்படும் அரசியலில் பெண்கள் பங்குகொள்ளுதல் மற்றும் அரசியல் தீர்மானம் எடுத்தலில் பெண்களின் செல்வாக்கு எந்தளவு காணப்படுகின்றது என்பது தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இலங்கைப் பெண்களின் அரசியல் பிரவேசம் பாராளுமன்றத்தில், அமைச்சரவையில், மாகாண சபையில், உள்;ராட்சியில் எவ்வாறுள்ளது மற்றும் அரசியலில் தீர்மானம் எடுப்பதில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றனர் மற்றும் அரசியலில் தீர்மானம் எடுப்பதில் பங்குகொள்ள முடியாமைக்கான காரணங்கள் என்ன என்பது தொடர்பான விடயங்களை ஆராய்வது  முக்கியமான அம்சமாகும்;.

இலங்கையில் சட்டத் துறையில் பெண்கள்

    பாராளுமன்றத்தில் பெண்களின் தொகை குறைவாகவே இருந்துள்ளதை இலங்கை அரசியல் வரலாற்றினை அறிவதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். எனினும் பெண்களின் பாராளுமன்றப் பிரவேசம் படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றமை பாராட்டத்தக்கது. 1931ம் ஆண்டு சட்டத் துறைத் தேர்தலில் ஒரு பெண் மாத்திரமே போட்டியிட்டார். 1994ம் ஆண்டு தேர்தலில் 55 பெண்களும், 2000ம் ஆண்டுத் தேர்தலில் 117 பெண்களும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.   


        இலங்கையில் முதன்முதலாக சட்டத் துறையில் பிரவேசித்த பெண்ணாக திருமதி யுனநடin ஆழடயஅரசந விளங்குகின்றார். இப் பெண்ணின் தந்தை வு.ர் ஆநநனநnலைய ஆவார். வு.ர் அநநனநnலைய 1931ல் ருவன்வெல்ல தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவானார். அவர் இறந்து 3மாதங்களின் பின்னர் இப் பெண் 1931 நவம்பர் மாதத்தில் 10000 பெரும்பான்மை வாக்குகளுடன் சட்டத்துறைக்குத் தெரிவானார். சட்டத் துறைக்கு நுழைந்த இரண்டாவது பெண், திருமதி யேளரஅ ளயசயஎயயெஅரவவர ஆவார். இவர் கொழும்பு வடக்கு ஆசனத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த ரத்ன ஜோதி சரவனமுத்தiயாவின் மனைவியாவார். 1941 ஜனவரி மாதத்தில் ரத்னஜோதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு யேளரஅ ளயசயஎயயெஅரவவர நியமிக்கப்பட்டார்.
        1936 தேர்தலில் மீண்டும் திருமதி யுனநடin ஆழடயஅரசந போட்டியிட்டார். எனினும் அவர்  னுச.N.ஆ.பெரேராவால் ருவன்வெல்ல ஆசனத்திற்கான போட்டியில் தோற்கடிக்கப்பட்டார். இருந்த போதும் திருமதி யுனநடin ஆழடயஅரசநனன் முதல் சட்டத் துறைப் பெண் என்ற பெருமை காலத்தால் அழியாததாகும். சோல்பறி யாப்பின் கீழான 1947ல் இடம் பெற்ற முதலாலது பொதுத் தேர்தலில் திருமதி புளேரன்ஸ் சேனாநாயக்க (குடழசநnஉந ளுநயெயெலயமந) தெரிவு செய்யப்பட்டார். அவர் கிரியெல்ல ஆசனத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மாத்திரமே சரவணமுத்துவின் மறைவிற்குப் பிறகு பாராளுமன்றத்தில் இருந்த ஓரேயொரு பெண்ணாவார். 1948 ஏப்ரலில் திருமதி குசூமா குணவர்ந்தன (முரளரஅய புரயெறயசனநயெ) அவருடைய கணவன் பிளிப் குணவர்ந்தன பாராளுமன்ற உருப்பினருக்கான  தகுதியை இழந்ததையடுத்து அவிஸ்ஸாவெல்ல ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டார். ஆகையால் திருமதி புளேரன்ஸ் சேனாநாயக்கவோடு சேர்ந்து  குசுமா குணவர்ந்தனவும் பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினராய் விளங்கினார்.
        இதன் பின்னளர் 1949 துரநெ ல் திருமதி தமரா இலங்கரத்ன (வுயஅயசய ஐடடயபெயசயவநெ) கண்டி ஆசனத்தில் தெரிவானார். இப்பெண் தனது கணவனான வு.டீ இலங்கரத்னவின் வெற்றிடத்திற்கே நியமிக்கப்பட்டார். 1952ம் ஆண்டு இரண்டாவது பாராளுமன்றத் தேர்தலில் திருமதி குசுமா குணவர்ந்தன அவிஸ்ஸாவெல்ல தொகுதி சார்பில் மீண்டும் தெரிவானார். அதே போல் னுச.ளு.யுவிக்ரமசிங்கவின் மனைவி டொரின் விக்ரமசிங்க (னுழசநநn றுமைசயஅயளiபொந) அகுரஸ்ஸ தொகுதியிலிருந்து பாராளுமன்ற புதிய உறுப்பினராகத் தெரிவானார். இரண்டாவது பாராளுமன்றக் 0காலப் பகுதியில் திருமதி ஊடழனயபா துயலயளரசலைய 1953 ஒக்டோபரில் செனட்டுக்காகத் தெரிவு செய்யப்பட்டார். மீண்டும் 1956 பொதுத் தேர்தலில்  போட்டியிட்டார். எனினும் அவிஸ்ஸாவெல்ல ஆசனத்திலேயே பிளிப் குணவர்ந்தன என்ற பிரசித்தி பெற்ற அரசியல் வாதியும் போட்யிட்டதால் இவரால் அவ் ஆசனத்தில் வெற்றி பெற முடியவில்லை.
    2000ம் ஆண்டு  பாராளுமன்றத்தில் 09 பெண்கள் அங்கம் வகித்தனர். அவர்களில் பலர் ஏலவே பாராளுமன்ற உறுப்பினராய் இருந்தோராவர். இன்னும் சிலர் புதிய உறுப்பினர்களாய் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர். அந்த வகையில் அவ் 9 பெண்களினதும் பெயர் விபரம் வருமாறு; அன்ஜான் உம்மா, பேரியல் அ~;ரப், சோமா குமாரி தென்னக்கோன், சிறியானி பெர்னான்டோ, சுரன்ங்கி எல்லாவெல, சந்திரானி பண்டார, சுமேதா ஜயசேன. 2001ம் ஆண்டு- 2004ம்ஆண்டு வரை பாராளுமன்றத்தில் அமர பியசீலி, சுமேதா ஜயசேன, பவித்ரா வன்னியாரச்சி, அன்ஜான் உம்மா, பேரியல் அ~;ரப், சந்திரானி பண்டார, சோமா குமாரி, மல்லிகா டி மேல், சித்ரா சிறிமதி மன்திலக என்போர் அங்கம் வகித்தனர்.
    2004ம் ஆண்டுப் பாராளுமன்றத்தில் சந்திரானி பண்டார, நிருபமா ராஜபக்ஸ, சிதம்பர நாதன் பத்தினி, பவித்ரா வன்னியாரச்சி, சந்திமா வீரக்கோடி, சுமேதா ஜயசேன, அமர பியசீலி மேரி, சுஜாதாத தலதா அதுகோரல, பத்மினி சிதம்பர நாதன், தங்கேஸ்வரி, அன்ஜான் உம்மாஅங்கம் வகித்தனர்;. 2010 பொதுத் தேர்தலில் 13 பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆவர்களின் விபரம் பின்வருமாறு: ரதர்சினி பிரனான்ந்து, மாலினி பொன்சேகா, அனோமா கமகே, சந்திரானி பண்டார, சுமேதா ஜீ. ஜயசேன, விஜேகலா மகேஸ்வரி, நிருபமா ராஜபக்ஸ, கமலா ரணதுங்க, றோஸி சேனாநாயக்க, உபெக்ஸா சுவர்ணமாலி, பவித்ரா வன்னியாரச்சி, சிறியானி விஜேவிக்ரம, தலதா அதுகோரல ஆகியோராவர்.
    சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கைப் பெண்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம்
   ஆண்டு    பெண்களின்   எண்ணிக்கை    மொத்த எண்ணிக்கை    மூ
   1947       03      95     3.15
   1952       02      95     2.1
   1956       04      95     4.2
   1960       02      151     1.3
   1960       03      151     1.9
   1965       06      151     3.9
   1970       06      151     3.9
   1977       07      168     4.1
   1989       12      225     5.3
   1994       11      225     4.8
   2000       09      225     4.0
உண்மையில் தொகுத்து நோக்கும் போது பாராளுமன்றத்தில் 4.5மூனரே பெண்களாவர்.




இலங்கையில் அமைச்சரவையில் பெண்கள்    

    இலங்கையிலிருந்தே முதல் பெண் பிரதமர்;, முதல் பெண் ஜனாதிபதி ஆகியோர் உருவாகியுள்ளனர். இலங்கையில் முதன்முதல் பெண்னொருவர் அமைச்சரானது 1956லிலேயே ஆகும். அது 1956லில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய விமலா விஜேவர்ந்தன (றுiஅயடய றதைநறயசனயயெ) சுகாதார அமைச்சராகப் பதவியேற்றமையாகும். ளுசைiஅயறழ சுயவறயவவந னுயைள டீயனெயசயயெலயமைந (சிறிமாவோ பண்டார நாயக்க ) 1960 ஜூலை 21ல் பிரதமராகப் பதவியேற்றார்.
    1982ல் ஹேமா சுனேத்திரா ரனசிங்க (ர்நஅய ளுரநெவாசய சுயயௌiபொந) சுகாதார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1984களில் அமர பியசீலி ரத்னாயக்க மாவட்ட, அரச செயற்திட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் 1984களில் கேகாலை மாவட்ட அமைச்சராகவும் 1986களில் அநுராதபுர மாவட்ட அமைச்சராகவும் விளங்கினார். 1989களில் ரேனுகா ஹேரத் ரணவீர சுகாதார மற்றும் பெண்கள் விவாகர அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
    1994லில் லலித் அதுலத் முதலியின் மனைவியான சிறிமானி அதுலத் முதலி சுற்றாடல் மற்றும் பெண்கள் விவகார அமைச்சராக நியமிகச்கப்பட்டார். அதே ஆண்டில் ஹேமா ரத்னாயக்க  கிராமியக் கைத் தொழில் மற்றும் மிருகப் பண்ணகைள் பிரதி அமைச்சராகச நியமிக்கப்பட்டார். ராஸ மனோகரி புலனேந்திரன் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் கீழ் தேசிய கல்வி அமைச்சராக சிறிது காலம் செயற்பட்டார். சந்திரிகா பண்டாரநாயதுங்க அமைச்சரவையின் தலைவராக அதாவது நாட்டின் தலைவராகவும், நிதியமைச்சராகவும் 1994ம் ஆண்டு நியமணம் பெற்றார். 2000ம் ஆண்டில் பெண்கள் விவகார அமைச்சராக சுமேதா ஜயசேனவும், திட்டமிடல் அமுலாக்க அமைச்சராக பேரியல் அ~;ரபும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
கெபினட் அமைச்சர்கள்
ஆண்டு    மொத்தம்    ஆண்கள்    பெண்கள்    வீதம்
1980    25    25    1    3.8
1985    28    26    2    7.1
1990    26    25    1    3.8
1993    29    28    1    3.4






மூலம்:-றுழஅநn ழக ளழரவா யுளயை
கெபினட் அந்தஸ்த்துப் பெற்ற அமைச்சர்கள்
ஆண்டு    மொத்தம்    ஆண்கள்    பெண்கள்    வீதம்
1980    39    39    0    0
1985    42    42    0    0
1990    52    47    5    9.5
1993    52    47    5    9.5





   

மூலம்:-றுழஅநn ழக ளழரவா யுளயை   
இலங்கையில் மாகாண சபையி;ல் பெண்கள்

    இலங்கையில் பெண்களின் பங்குற்றலானது பாராளுமனறத்தில குறைவாகவேயிருப்பது போன்றே மாகாண சபையிலும் பெண்களின் பங்குபற்றல் குறைவாகவேயுள்ளது. 1989ம்ஆண்டு 2.9மூமும், 1993ம் ஆண்டு 4.7மூமும், 1999 3.3மூமும் பெண்கள் மாகாண சபையில் அங்கம் வகித்தனர். 1999ம் ஆண்டு மாகாண சபை மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 378கவிருந்த போது பெண்களின் எண்ணிக்கை 13கவிருந்தது. 1993ல் மாகாண சபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 382கவிருந்த போது பெண்களின் எண்ணிக்கை 12கவிருந்தது.
    பின்வரும் அட்டவனை மூலம் 1993, 1999 ஆகிய வருடங்களில் ஒவ்வொரு மாகாண சபையிலும் பெண்கள் பிரதிநிதித்துவம் பெறும் விதத்தினை அவதானிக்க முடியும். அது மாத்திரமின்றி 1993ல் பெண்களின் பிரதிநிதித்துவத்ததை விட 1999கும் போது பெண்களின் மாகாண சபை பங்குபற்றல் குறைந்திருப்பதையும் அவதானிக்கலாம்.
மாகாண சபையில் பெண்கள்
மாகாணம்    1999    1993
    மொத்தம்    பெண்கள்    வீதம்    மொத்தம்    பெண்கள்    வீதம்
 மேல்    104    02    1.9    104    07    6.7
வட மத்தி    34    01    2.9    36    04    11.1
வட மேல்    51    03    5.8    52    03    5.8
 ஊவா    32    01    3.1    34    00    0.0
 மத்தி    58    03    5.1    58    01    1.7
 தெற்கு    55    01    1.8    55    02    3.6
சப்ரகமுவ    43    01    2.3    44    01    2.3
மொத்தம்    377    12    3.3    383    18    4.7
   மூலம்:- றுழஅநn யனெ புழஎநசயெnஉந in ளழரவா யுளயை

    அமைச்சரவையில், சட்டத்துறையில் எனப் பெண்கள் சாதிக்க மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு, மாகாண சபையில் அங்கத்துவம் வகித்துக் கிடைத்த அனுபவங்களே காரணமாகும். இதற்கு சிறந்த உதாரணம,; முன்பு மேல் மாகாண சபையில் முதலமைச்சராயிருந்து பின்னர் ஜனாதிபதிப் பதவிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க ஆவார். முhகாண சபையில் அங்கம் வகிக்கின்ற பெண்கள் குறைவாயினும் போட்டியிடுவதிலாவது பெண்கள் உயர்வான நிலையில் உள்ளனரா? என்று நோக்கின் அதற்கும் எதிர் மறையான பதிலே கிடைக்கின்றது. 1993ல் மாகாண சபைக்கான 2351 வேட்பாளர்களில் 1மூக்கும் குறைவானோரே பெண்களாவர்.
1986க்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியலில் புகழ்பூத்தோரும், மனைவிமாரை மாகாண சபைத் தேர்தல்களில் நிறுத்த முனைந்தனர். தம்முடைய செல்வாக்கினை மாகாண மட்டத்திலும் நிலை நிறுத்திக் கொள்ளவே இவ்வாறு செய்துள்ளனர். இதற்கு எடுத்துக் காட்டாய் பின்வருவோரைக் குறிப்பிடலாம்.
திருமதி ராணி அதிகாரி               யு.ஆ.ளு.அதிகாரி
திருமதி மேரி லெரின்               பெஸ்டஸ் பெரேரா
திருமதி இந்திரானி               னு.ஆ தசநாயக்க
திருமதி நலினி                     சமரவீர வீர வன்னி
திருமதி ஜயானி திசாநாயக்க            பேர்ட்டி திசாநாயக்க

    மாகாண சபையில் பெண்கள் பற்றிப் பேசுகையில்;;, 1999ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஊவா மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட திருமதி நலினி வீரவன்னி (யேடini றுநநசயறயnni) மற்றும் வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவான திருமதி ஜயானி திஸாநாயக்க (துயலயni னுளைளயயெலயமய) ஆகிய இரண்டு பெண்களும் தமது கணவன்மாருக்கு இடமளிக்கும் பொருட்டு ராஜினாம செய்ததைத் தொடர்ந்து அவ்விருவரின் கணவன்மாரும் முதலமைச்சர் பதவியை ஏற்றமை தொடர்பாக குறிப்பிட வேண்டியுள்ளது.
    தொகுத்து நோக்குகின்ற போது மாகாண சபைகளில் 3.4மூப் பெண்கள் மாத்திரமே அங்கம் வகிக்கின்றனர்.

உள்;ராட்சியில் பெண்கள்


    பாராளுமன்றத்தில், மாகாணசபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தளவில் இருப்பதைப் போலவன்றி உள்ளுராட்சியிலேனும் பெண்களின் பங்குபற்றல் அதிகளவில் உள்ளதா? என்று நோக்கின் ஆரம்ப காலங்களிலிருந்தே உள்ளுராட்சியில் பெண்களின் பங்குபற்றல் குறைந்தளவிலேயேயிருப்பதை அவதானிக்க முடிகின்றது. 1987ம் ஆண்டில் கிராம உதய மண்டலங்களில் அங்கம் வகித்த 4193 மொத்தப் பேரில் 41பேர் மாத்திரமே பெண்களாவர். அது 0.97மூகும்.
    அடுத்து மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகிய உள்;ராட்சி நிறுவனங்களில் பெண்களின் நிலை எவ்வாறுள்ளது என்று நோக்கலாம்.
    1991ம் ஆண்டு மாநகர சபை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 201 ஆகும். அதில் பெண்கள் 6 பேராவர். அது 2.9 மூகும். அதே போல் 1997ம் ஆண்டில் மாநகர சபை மொத்த உறுப்பினர்கள் 252 பேருக்கு பெண்கள் 9 பேரேயாவர். இது 3.4 மூகும்.
    1991ல் நகர சபைக்குத் தெரிவானோர் 235 பேராவர். இதில் பெண்களின் எண்ணிக்கை  6 ஆகும். வீத அளவில் குறிப்பிடுவதாயின் 2.4மூமாகும.; இந் நிலைமை 1997கும் போது 2.6மூமாக உயர்ந்தது. 1997கும் போது நகர சபையின் மொத்த அங்கத்தவர்கள் 331 உறுப்பினர்களில் 9 பேர் பெண்களாவர்.  1991ல் 2632 மொத்த பிரதேச சபை உறுப்பினர்களில் 42 பேர் மாத்திரமே பெண்களாவர். இது 1.6மூகும். இந் நிலை 1997ல் முன்னேற்றமடைந்தது. அதாவது 1997ம் ஆண்டில் மொத்த 3137 உறுப்பினர்களில் 55 பேர் பெண்களாவர். இது 1.7மூகும்.
    இந்த புள்ளி விபரங்களின்படி பெண்களின் உள்;ராட்சி மட்டத்திலான அரசியல் பங்குபற்றல் அதிகரித்திருப்பதை அறிய முடியும். எனினும் உள்;ராட்சி மட்டத்திலும் ஆண்களைப் பார்க்கப் பெண்கள் பல மடங்கு பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர், என்பதை மறுக்க முடியாது. தொகுத்து நோக்குகின்ற போது உள்;ராட்சி மட்டத்தில் பெண்களின் பங்குபற்றலின் மட்டம் 1.97மூமேயாகும.;


இலங்கை அரசியலில் தீர்மானம் எடுத்தலில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதற்கான காரணங்களை

மத ரீதியான மரபுகள்.
இலங்கையில் பெண்கள் அரசியல் பங்குபற்றுவதிலோ அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதிலோ ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவாகும். பெண்களின் அரசியலில் பங்குபற்றுதல் மற்றும் தீர்மானம் எடுப்பதில் பாதிப்பு செலுத்தும் காரணிகள் என்ற வகையில் பின்வரும் விடயங்களை நாம் அடையாளப்படுத்தலாம்.
மனித சமூகம் ஆண், பெண் எனும் இரு தரப்பினரைக் கொண்டதுடன் மத ரீதியிலும் ஒரு பிரிவினரைக் கொண்டுள்ளது. இச்சமூகத்தில் தமிழர்களின் சமூக வாழ்வில் உள்ள உறைந்து காணப்படும் பழமைவாதம் இனம், மொழித்தன்மை, பாரம்பரிய கலாசாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்ற பல்வேறு பெயர்களிலும் கட்டிக்காக்கப்படுகிறது.  தமிழர்களின் பழமைவாதத்தின் அம்சங்களை  மிக எளிதில் அடையாளம் காண்பதற்குரியதாக செயற்படுவது தமிழர் முறையாகும். பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற பிரதான சடங்குகளிலும், ஆக்க முயற்சிகளிலும் மதம் முன் நின்று  நெறிப்படுத்துகிறது. இவ்வகையில் மரபு பழக்க வழக்கங்கள் மத ரீதியில் கட்டமைக்கப்பட்டு பின்பற்றபப்டுகிறது. அதன்படி,
  •    இந்து மத ரீதியான மரபுகள்.
  •    கிறிஸ்தவ மத ரீதியான மரபுகள்.
  •    இஸ்லாமிய மத ரீதியான மரபுகள்.
என மூன்று வகையில் மத ரீதியான மரபுப் பழக்க வழக்கங்கள் மக்களால் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதற்கமைய ஒவ்வொரு மதமும் தம்மளவிலான மரபுகளைப் பின்பற்றி வருகின்றன. மேற்குறிப்பிட்ட மூன்று சமயங்களிலும் பெண்களுக்கெதிரான பல்வேறு கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் எடுத்துக் கூறப்பட்டு பெண்களின் சுதந்திரத்திற்கும் பங்கம் ஏற்படும் வண்ணம் அவர்களின் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் பஙகுகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
அரசியலில் ஆண்களின் பிரதிநிதித்துவம் மேலோங்கி இருக்கின்றமை
பொதுவாகவே இலங்கையை பொறுத்தவரை பாராளுமன்றத்திலும் சரி மாகாண சபையிலும் சரி உள்ளுராட்சி சபைகளிலும் சரி ஆண்களே பெரும்பான்மையினராக உள்ளனர் 31 வீதத்தினர் கூட பெண்கள் இல்லை உதாரணமாக பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 04 வீதமாக மட்டுமே காணப்படுகின்றது இதன் மூலம் நாம் அறிந்துக் கொள்ளலாம். இதனால் பெண்களினால் கொண்டுவரப்படுகின்ற திட்டங்களோ அரசியல் நகல் திட்டங்களோ பாரானுமன்றத்தில் கூடிய கவனத்தில் எடுக்கப்படாமையினால் பெண்கள் இயல்பாகவே தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளில் இருந்த புறக்கனிக்கப்படுகின்றார்கள். அத்தொடு ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரவேண்டுமாயானால் வெறுமனே நான்கு வீதமான பெண்களை வைத்துக் கொண்டும் ஏனைய அனைவரும் ஆண்களாக இரு;பதனால் தீர்மானங்களை மேற்கொள்வதில் சிக்கல் நிலை தோன்றுகின்றது. 
சமூக ரீதியான புறக்கணிப்பு
இயல்பாகவே பெண்கள் என்பவர்கள் சமூக ரீதியாக புறக்கனிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் பெண்கள் அரசியலில் பங்குபற்றுதல் என்பது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. அவ்வாறு ஒரு சில பெண்களுக்கு அரசியலில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களுக்கு அரசியலில் உயர்மட்ட ரீதியில் முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு கிடைப்தில்லை இலங்கையை பொறுத்வரை பிரதான இரு கட்சிகளிலும் கட்சியின் உயர் மட்டங்களில் சில பகுதிகளில் ஆலோசகர்களாக காணப்படுகின்றார்களே தவிர முடிவுகளை எடுக்க கூடிய அளவிற்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

பெண்கள் மீதான குடும்ப பொறுப்பு

குடும்பம் என்ற அலகு மனித விழுமியத்தின் ஒரு மூலமாக இருப்பினும் இக் குடும்பமே பெண்களுக்கெதிரான வன்முறை விளையும் ஒரு விளைநிலமாக இருக்கின்றது. மேலும் இக்குடும்பத்தில் நிகழும் வன்முறை சமூக மயமாக்கள்  நடைமறையின் ஊடாக நியாயப்படுத்த கூடிய ஒன்றாக மாறிவருகின்றது. மேலும் பெரும்பால குடும்பங்களில் பெண் வேலைக்கு செல்லாதவளாக அனைத்து ஏனைய வீட்டு வேலைகள் மற்றும் குடும்ப பொறுப்பை சுமக்க வேண்டியவளாக இருக்கின்றாள் ஆண்கள் வெறுமனே வேலைக்கு போய் பணம் சம்பாரிப்பவர்களாக மட்டுமே இருக்கின்றனர். எனவே குடும்பத்pல் இவ்வாறான பல்வேறு சிக்கல் நிலை காணப்டும் போது பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கோ அரசியலில் தீர்மானம் எடுக்கும் செயன்முறையையோ மேற்கொள்ள முடியாதவளாக பெண் காணப்படுகின்றாள்.

கட்சியின் உயர் மட்ட பதவிகளிலே ஆண்களே இருக்கின்றமை
இலங்கையை பொறுத்தவரை நாம் பிரதான இரண்டு கட்சியினையும் எடுத்துக் கொண்டால் தற்போது ருNP இலும் சரி ளுடுகுP இலும் சரி கட்சியின் உயர்மட்ட பதவிகளிலே பெண்கள் என்போர் இல்லை கட்சியின் எந்தவொரு தீர்மானம் எடுப்பு செயன்முறையிலும் ஆண்களின் மேலாதிக்கமே காணப்படுகின்றது இதனால் பெண்கள் தமக்கு சார்பான அல்லது பெண்கள் தொடர்பான எந்தவொரு சட்டத்தையும் கொண்டுவர முடியாதா நிலை காணப்படுகின்றது.


இலங்கை அரசியலில் குடும்ப செல்வாக்கு

இலங்கை அரசியலை எடுத்துக் கொண்டால் ஆரம்ப காலம் தொட்டு அரசியலிலே குடும்பத்தின் செல்வாக்கே காணப்படுகின்றது. ஆரம்ப அரசியலில் பண்டாரநாயக்க குடும்ப செல்வாக்கு பின்னர் தற்போது மகிந்த ராஜபக்சவின் குடும்ப செல்வாக்கே காணப்படுகின்றது இதனால் பெண்களை பிரதிநிதித்துவபடுத்தக் கூடிய ஒரு சில பெண்கள் சட்டமன்றத்திலே காணப்பட்டாலும் அவர்களுக்கும் தீர்மானங்களை எடுக்கும் அளவிற்கு அதிகாரமும் இல்லை.
 
பெண்கள் உயர்மட்ட பதவிகளுக்கு பயந்து விலகிக் கொள்ளுதல்
பொதுவாக இலங்கையிலே அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது ஒரு சில பெண்கள் அரசியலில் ஈடுபட்டாலும் கூட அவர்கள் கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கோ அல்லது அமைச்சின் உயர்மட்ட பதவிகளுக்கோ வர விரும்புவதில்லை இதற்கான பிரதான காரணம் அவசர்களிடையே காணப்டும் அச்சம் ஆகும் ஏனெனில் ஆண்களினால் எமக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதவதுடன் தாம் உயர் பதவிகளுக்கு வந்தால் எமக்கு ஒத்துழைப்பு யாரும் வழங்கமாட்டார்கள் போன்ற மனோபாவங்களும் காணப்படுகின்றமையானது அரசியலிலே பெண்களின் தீர்மானம் எடுத்தல் செயற்பாடு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

No comments:

Post a Comment