பாசிசம் FASCISM


பாசிசம் (FASCISM)

D. JEGATHEESWARAN
B.A(HONS), M.A(PERA), PGDE, DIP.IN.HR,
SPECIAL IN POLITICAL SCIENCE







  • பாசிசம் என்பதற்கு திட்டவட்டமான வரைவிலக்கணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. எனவே தான் கோட்பாடுகள் அற்ற ஆட்சி முறையே பாசிசம் எனப்படுகின்றது. தாராண்மைவாதம் என்பன போன்றவற்றிக்கு அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதைப் போன்று பாசிசம் என்பதற்கு இத்தகைய   வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்படவில்லை. பாசிசம்  தெளிவற்றதும், குழப்பகரமானதுமான  ஒரு ஆட்சி முறையாகும் எனவே தான் இதனை 'மயக்கும் சக்தியை தருகின்ற போதை' என்கின்றனர்.

பாஸிஸவாதம் என்பது அரசின் உயரியத்தன்மை (Glorification of the State) சிரேஷ்டத்தன்மை மற்றும் எதேட்சையதிகாரம், இனவாதம், இராணுவவாதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கருத்தியலாகும். 

பாசிசம் இத்தாலியிலும், ஜேர்மனியிலுமே முதலில் தோற்றம் பெறுவதற்கு முன்னரே பிரான்சிலும் இலத்தின் அமெரிக்காவிலும் தோற்றம் பெற்றது. இந்நாடுகளில் தோற்றம் பெற்றாலும் 1922 அம் ஆண்டு இத்தாலிலும் 1933 ஆம் ஆண்டு ஜேர்மனியிலும்  பாசிசம் என்பதற்கு முழுவடிவம் கற்பிக்கப்பட்;டது. 

எனவே தான் முசோலினி  ஜேர்மனிய கிட்லர் போன்றவர்களின் ஆட்சி முறைகளும், நடைமுறைகளிலுமே பாசிசம் எனப்படுகின்றது. இத்தாலியில் பெணிட்டோ முசோலினியும், ஜேர்மனியில் எடோல்ப் ஹிட்லரும் ஐரோப்பிய பாஸிஸவாத்தின் பிரதான தலைவர்கள் இருவராவர்.

பாசிசம் (கயளஉழை)என்னும் இலத்தின் மொழி சொல்லிருந்தே தோற்றம் பெற்றது. பாசிசம் என்னும் சொல்லுக்கு இருவகையான அர்த்தங்கள் கற்பிக்கப்படகின்றது.  ஒரு நிலையில் குழு அல்லது கூட்டம் எனவும்; மற்றொரு நிலையில்  உறுதியான மரக்கட்டு என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது. 

இதனை தெளிவுப்படுத்தும் முகமாகவே 1922ஆம் ஆண்டில் இத்தாலிய பாசிச ஆட்சியினை ஸ்தாபித்த முசோலினி தமது இரானுவத்தின் அடையாள சின்னமான மரக்கட்டையில் வேயப்பட்ட கோடாரி சின்னத்தை பயன்படுத்தினர்.  பின்னர் அதனையே தமது அரசின் சின்னமாகவும் அடையாளப்படுத்தினர். 

பாசிசம்  என்பதற்கு ஆதரவாக கருத்து முன்வைத்தவர்களுள் மெகைன் என்பவர் குறிப்பிடத்தக்கவர். ஆவர். 'தாராண்மை வாதம் என்பது ஜனநாயகம்  தனிமனித வாதம் என்பவறறின் கூட்டு என்பதை போல பாசிசமானது எதேச்சியதிகாரம், சர்வாதிகாரம், தேச வழிபாடு என்பவற்றின் கூட்டு என்கின்றனர்.' பாசிசத்தை வலதுசாரி சர்வாதிகாரம், இடதுசாரி தீவிர வாதம் எனவும் அழைக்கின்றனர். 

தாராண்மைவாதம், மாக்ஸிஸ வாதம் என்பவற்றோடு ஒப்பிடும் போது பாசிசமானது திடிரென தோன்றிய ஒரு ஆட்சி முறையாக காணப்படுகின்றது.  எல்லா அதிகாரங்களையும் கொண்டே அரசே பாசிசம் என்கின்றனர்.  பாசிச அரசில் அதிகாரமானது வரம்பு அற்றதாகவும்,  சர்வாதிகாரம் மிக்கதுமான காணப்படுகின்றது. இவர்களின் கருத்துப்படி அனைத்தும் அரசிற்கு உள்ளேயே அரசிற்கு வெளியேயும், வேறானதும் எதுவுமில்லை. என்கின்றனர். 

பாசிசவாதிகள் ஒருவரன கிட்லர்  'மக்கள் வேண்டுகோள் விடுபவர்களை  விட  கட்டளை இடுபவரையே அதிகம் விரும்புவார்கள் என்கின்றார';. நடைமுறையில் பாசிசமானது பலமிக்க ஒரு ஆட்சி முறையாக காணப்படுகின்;றது.


பாஸிஸவாத அரசு

இது முதலில் 1920, 1930 தசாப்தங்களில் இத்தாலி மற்றும் ஜேர்மனி போன்றவற்றில் தோற்றம் பெற்றது. 

இத்தாலியில் பெணிட்டோ முசோலினியும், ஜேர்மனியில் எடோல்ப் ஹிட்லரும் ஐரோப்பிய பாஸிஸவாத்தின் பிரதான தலைவர்கள் இருவராவர்.

பாஸிஸவாத்தின் பிரதான கருத்தியலாக இருப்பது இனவாத பார்வையில் அரசு தொடர்பாக விபரிக்கும் ஹிட்லர் குறிப்பிடுவதாவது, 'இனத்தின் சிருஸ்டியே அரசாகும்' என்றார். 

பாஸிஸத்தால் அரசு மற்றும் இனம் என்பது சமமானவையாக கருதப்பட்டுள்ளமையை இதன  மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

பாஸிஸவாத்திற்கு ஏற்ப அரசு என்பது 'இனத்தின் சிருஷ்டியாகும்' அரசிhல் இனத்தின் தேவையே பிரதிநிதித்துவப்படுத்தப்படும். இதனால் அரசும் இனமும் ஒன்றாகும். 

அரசு தொடர்பில் காணப்படும் பாஸிஸவாத வரைவிலக்கணங்களில் மிகவும் பிரபல்யமான இரு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. அதாவது, 

'அரசு நிரகற்ற தாபனமாகும்'  

'அரசு சர்வவல்லமை பொருந்திய தாபனமாகும்' என்பனவே அவையாகும்.

நீட்சே முன்வைத்த 'சூப்பர்மேன்' (அதிசிறப்பு மனிதன்) (Superman) என்ற எண்ணக்கரு அரசு தொடர்பான பாஸிஸவாத கருத்தியல் தொடர்பில் பெரிதும் தாக்கம் செலுத்தியுள்ளது. இதன்மூலம் அரசின் உயரியத்தன்மை, உயர்ந்தது, நிகரற்றது போன்றவற்றின் மூலம் அரசுக்கு நிகராக்கக்கூடிய வேறு எந்த நிறுவனங்களும் இல்லை என்பது விளங்குகின்றது.

அதிகாரம் எல்லையற்ற நிலையே 'அரசு சர்வ வல்லமை பொருந்தியது' என்பதன் அர்த்தமாகும். அதிகாரம் உயரியதும் நிகரற்றதுமாக இருத்தல் வேண்டும் என்பதாகும். 

பாஸிஸ அரசு சமூக நிறுவனமாகவல்லாமல் அது சமூகத்திற்கு மேலுள்ளதாகும். அரசு அதிசயத்தக்கதும், மர்மமானதுமான இயல்பினைக் கொண்டிருப்பதோடு இதன் உண்மையான இயல்பினை சாதாரண மக்களால் விளக்கிக்கொள்ள முடியாது. 

அத்தோடு அரசின் தோற்றம் அதன் தற்போதைய நிலை மற்றும் அரசின் எதிர்காலம் தொடர்பில் முறையான விபரிப்பு ஒன்று பாஸிஸவாத்ததில் முன்வைக்கப்படுவதில்லை. 'அரசு நிலையானது' என்பதில் அவதானம் செலுத்துகின்றது. அரசுக்கு ஆரம்பமோ அல்லது முடிவோ கிடையாது என்பதே இதன் அர்த்தமாகும். 

'அரசும் சமூகமும் சர்வசமமானது' என்பதன் மூலம் பாஸிஸவாதிகள் சமூகம் மற்றும் தனிநபர்களை கவனத்தில் கொள்ளாது அரசின் முக்கியத்துவத்தை மட்டும் முன்னிலைப்படுத்தினர் என்பதே அர்த்தப்படுத்தப்படுகின்றது. அரசுக்கும் அரசின் அதிகாரத்திற்கும் தனிநபர்கள் எல்லாவகையிலும் கட்டுப்படும்போதே தனிநபர் விடுதலை சாத்தியப ;படுகின்றது. 

சமூகத்தில் மக்கள் முக்கியமற்றதோடு, அரசு மட்டுமே முக்கியமானது என்று குறிப்பிடும் பாஸிஸவாதிகள் 'அரசே ஆட்சியாளன் ஆகும்'. அதாவது அரசும் ஆட்சியாளனும் சர்வசமமானவையாகும். இதனால் அரசின் படைப்பே ஆட்சியாளனாவான் என்பதை சுட்டிக்காட்டியது.

இதன்படி பாஸிஸ அரசில் ஆட்சியாளர் சர்வதிகாரியாவான். அதாவது அறிவுடைய, பண்புடைய, மனிதமாண்புடைய, யுத்தப்பலம் கொண்ட, வீரமுடைய, இராஜதந்திரமுடைய, தேசஅபிமானமுடைய குணாம்சங்களில் பாஸிஸ ஆட்சியாளன் பரிபூரணமானவன். இதனாலேயே பிரசைகளிடமிருந்து தலைவனுக்கு எல்லாவகையிலும் அடிபணிவு எதிர்ப்பார்க்கின்றது. 

நாயகர் வழிபாட்டை வெளிகாட்டுவது முக்கியமானது. 

பாஸிஸ அரசில் எல்லா ஊடகங்களும் நாயகர் வழிபாட்டினை வெளிப்படுத்த வேண்டும். அரசியல் கட்சி, அமுக்கக்குழுக்கள் முழுமையாக தடைசெய்யப்படும்.

மக்களின் அரசியல் பங்குப்பற்றலை பாஸிஸவாதம் எதிர்க்கின்றது. 

அரச நிருவாக செயற்பாடுகள் முழுமையாக ஆட்சியாளனின் எதேட்சை அதிகாரத்தின் கீழ் நடைபெறுவதோடு அரசின் சட்டம் என்பது ஆட்சியாளனின் விருப்பங்களாகும்.

ஆயுதபலம் பாஸிஸவாதத்தின் அடிப்படையாகும். 

பாஸிஸ அரசுக்கு தாங்களைத் தவிர்த்த வேறு எந்த சமூக நோக்கமும் இல்லை. 'அரசு அரசுக்காகவே' என்ற நோக்கில் காணப்படும். அதாவது 'அரசு அரசுக்காகவே உள்ளது' என்பதாகும்.

பாசிசமும் ஜனநாயகமும்

பாசிசம் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு ஆட்சி முறையாகும். ஜனநாயகம் பெருபான்மையோர் ஆட்சி என்ற தத்துவத்தை நிலைநிறுத்த பாசிமானது அதனை நிராகரிக்கின்றது. 

ஒரு சமூகம் முழவதையும் கொண்டு நடாத்தப்படும் அதிகாரத்தினை சமூகத்திடமே வழங்க முடியாது என்கின்றனர்.  அப்படியே பெரும்பான்மையினரால் முடிவு எடுக்கப்பட்டாலும்  அது சரியானதாக  இருக்கும் என கூறமுடியாது. 

ஜனநாயக  நடைமுறையில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மக்களிடம் வழங்கப்படுகின்றது. ஆனால் அவர்கள் அதற்குரிய அறிவினை பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்.

பாசிசவாதிகள் ஜனநாயக நாடுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எழத்து உரிமை, பேச்சுரிமை கண்டன உரிமை போன்றவற்றை நிராகரிக்கின்றது. இத்தகைய  உரிமைகளை மக்கள் அரசுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்கின்றனர். 

அரசை விமர்சிக்கவோ, கண்டனங்களை  தெரிவிக்கவோ மக்களுக்கு உரிமை கிடையாது. அது தண்டனைக்குரிய குற்றமாகும். 


ஜனநாயக நாட்டில் முக்கிய அம்சமான பாராளுமன்றத்தினை பின்வருமாறு விமர்சிக்கின்றனர். 'பாராளுமன்றம் பொழுது போக்குக்காக கட்டப்பட்ட ஒரு பேச்சு கூட்டமாகும்.' 

உண்மையான சுதந்திரம் ஜனநாயக நாடுகளில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் அல்ல. அது செல்வந்தர்களின்  சொகுசு வாழ்க்கை. உண்மையான சுதந்திரம் எனப்படுவது சிறந்த பொருளாதாரம், நல்ல ஊதியம், கௌரவமான வாழ்க்கை, கூடிவாழ உற்றார் உறவினர்  என்பன போன்றவற்றில் பாசிச வாதிகள் சுதந்திரம் என்கின்றனர்.

பாசிசமும் சோசலிசமும்

பாசிச ஆட்சி முறையானது ஜனநாயகத்திற்கு போன்று சோசலிசத்திற்கும் எதிரானதுமானதாகவும் காணப்படுகின்றது. 

பாசிசவாதி சோசலிசவாதிகளை தமது பிரதான எதிரிகளாக காணப்படுகின்றனர். சோசலிசவாதிகள் பொதுவுடைமையை வலியுறுத்துகின்ற பாசிசவாதிகள் நிராகரிக்கின்றனர். தனியார் சொத்துரிமையும் தனியார் நிறுவனங்களும் குடும்ப உறவை உறுதியாக வளர்க்ககூடியது என்பதால் இவை சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படுமாயின்  சமுக நலனை  தூண்டியதாக இருக்கும் என்கின்றனர். 

பாசிச வாதிகள் சோசலிசவாதிகளை தமது பிரதான எதிரிகளான கருதுகின்றனர். 

1922 ஆம் ஆண்டு இத்தாலிய பாசிசத்தை கைப்பற்றிய முசோலினி மாக்ஸிய தலைவர்களுள் ஒருவரான  மடோடி என்பவரை கொலை செய்தான்.  அத்துடன் கிராம்சி என்பவரை சிறைப்படுகின்றார். 

1933 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் கிட்லர் தமது ஆட்சிகாலத்தில் ரஷ்யாவில் நிலவிக்கிடக்கும்  சோசலிச ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டு வருவேன் என சுளுறைக்கின்றான். பாசிசவாத ஆட்சிமுறையை பற்றி சோசலிச வாதிகள் குறிப்பிடுகையில் இரத்த பசி கொண்ட பயங்கரவாதமும், சர்வாதிகாரமும் கொண்ட அரசே என்கின்றார். 

பாசிசத்தின் பொதுவான பண்புகள்

அரசியல் அனைத்தாண்மைவாதம் (Totalrianism)

பாசிசவாதமானது ஒரு வகையில் சர்வாதிகார ஆட்சி முறையொன்றினை கட்டியெழுப்புவதை நோக்காக கொண்டிருந்ததோடு இது அரசியல் கோட்பாட்டில் அனைத்தாண்மைவாதம் எனும் எண்ணக்கருவாக அடையாளப்படுத்தப்பட்டது.

அதன் பொருளாவது அரசு அடிப்படையிலேயே சர்வாதிகாரமானதும், சர்வாதிகார ஆட்சி கட்டமைப்பின் மூலம் முழு சமூகத்தையும், அரசியல் முறைமையையும் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்கும், ஆதிக்கத்திற்கும் உட்படுத்திக் கொள்வதாகும்.

அரசுக்கு அடிபணிதல் (Cult of the state)

முசோலினியின் பாசிசவாத எண்ணக்கருவிலிருந்து ஆரம்பமான அரசின் அதிகாரத்துவத்தை முழு சமூகமும், சகல பிரசைகளும் நிபந்தனைகள் மற்றும் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளலும், அதன் அதிகாரதிற்கு தனது சுய விருப்பின்படியே அடி பணிவதுமே இதன் விளக்கமாகும்.

ஏனெனில் அரசானது முழு இனத்தினதும் உயர்வு, கௌரவம் மற்றும் விதி ஆகியவற்றின் வெளிப்பாடு என்பதாலாகும்.

பாசிச அரசியல் முறைமையினுள் அரசிலிருந்து விலகிய அல்லது சுயாதீனமான தனியாள் சுதந்திரம் ஒன்று இல்லை.

அதிகாரத்திற்கும், அதிகார நிறுவனங்களுக்கும் மற்றும் தலைவருக்கும் அடிபணிவதனூடாகவே சுதந்திரம் கிடைக்கப்பெறுகிறது.

தனியாள் சுதந்திரம் இல்லை

தாராண்iமைவாதத்தின் அடிப்படை கரு, அரசினால் பாதுகாக்கப்படும் தனியாள் சுதந்திரம் என்றால் பாசிசவாதத்தின் கீழ் 'தனியாள் சுதந்திரம்' என்ற எண்ணக்கரு மறுக்கப்படுதலே குறிக்கும்.

பாசிசவாதத்தில் தனியாள் சுதந்திரம் என்பது, அரசிற்கும், இனத்திற்கும் தலைவனுக்கும் நிபந்தனையின்றி காட்டும் அடிபணிவின் தன்மையைப் பொறுத்தே காணப்படுகின்றது.


நாயகர் வழிபாடு (தலைவருக்கு அடிபணிதல்)



தலைவனின் அதிகாரம் மற்றும் ஆதிபத்தியத்திற்கு சகல பிரசைகளும், முழு சமூகமும் நிபந்தனையின்றியும் சுய விருப்பத்துடன் அடிபணிதல் பாசிசவாதத்தின் விசேட பண்பாகும்.

ஜேர்மனியின் நாசிசவாத்தின் கீழ் முன்னிலைப்பட்ட புருரர் (Fuhrer) என்ற எண்ணக்கரு இந்த நாயகர் வழிபாட்டின் மூலம் வெளிப்பட்ட பாசிச வாதத்தின் படைப்பாகும்.

தீவிர வர்க்கவாதம் / இனவாதம்

ஜேர்மனிய நாசிசவாதத்தின் மூலம் வளர்க்கப்பட்ட இந்த பண்பின் மூலம் ஜேர்மன் இனம் உலகின் உயர்ந்த இனம் என வெளிப்படுத்தப்பட்டதுடன் உலகின் தலைவிதி ஜேர்மனிய இனத்தின் தலைவிதியின் படியே தீர்மானிக்கப்படும் எனவும் அதனால் முழு உலகத்தின் மீதும் தனது ஆதிபத்தியத்தை நிலைநிறுத்துவதற்கு இனத்திற்கு பூரண உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டது.

'ஜேர்மன் இனம் ஆரிய இனமாகும்' என்ற கருத்து இதன் மூலம் வெளிப்பட்டது. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலலேயே இலட்சக் கணக்கான யூதர்கள் கொல்லப்படுவதை ஜேர்மனிய நாசிச வாதிகள் நியாயப்படுத்தினர்

ஜேர்மனிய இனமான ஆரிய இனமே உலகில் தலைசிறந்த இனம் என்கின்றனர்.  இனவாதம் பாசிசத்தின் முக்கியமானது என்பதோடு அதுவே வரலாற்றில் திறவுக்கோள் என்கின்றனர். கி

கிட்லர் தான் எழுதிய 'மெயின் கேம்ப்ட்' என்ற நூலில் முதலாம் உலக மகாயுத்ததில ஜேர்மனி படுதோல்வியடைந்ததுக்கு இங்குள்ள யூதர்களும் சோசலிட்டுக்குமே காரணம் என்கின்றார். பாசிச வாதிகள் தமத இனத்தை மேம்படுத்தி காட்டுவதற்காக உலக மக்களை பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்.

    01 கலாசாரத்தை தோற்றுவித்தார்

    02. கலாசாரத்தை ஏற்றுக்கொள்வோர்

  03. கலாசாரத்தை அழிப்போர்.

  இம்மூன்று பகுதிகளும் ஜேர்மனிய இனத்தை கலாசாரத்தை தோற்றுவிக்கும் பிரிவிலும் உலகில் யூதர்கள் தவிர்ந்த ஏனையோரை கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளும் பிரிவிலும் வகைப்படுத்தினார். யூதர்களை அழிப்போர் பிரிவிலும் வகைப்படுத்துகின்றார். எனவே கலாசாரத்தை அழிக்கும் யூதர்களை கொலை செய்ய வேண்டும் என கருதி தனது ஆட்சிகாலத்தில்  பல இலட்சம் யூதர்களை நச்சுவாய்யூட்டி கொலை செய்கின்றார் கிட்லர்.

தீவிர இராணுவவாதம் (Extreme Militarism)

தீவிர இராணுவவாதம் இரண்டு மூலங்களிலிருந்து வெளிப்பட்டுள்ளது. 



1. ஜேர்மனியரே உலகின் உயர்ந்த இனம் என்பதால் முழு உலகமும் தங்களது ஆதிபத்தியத்தின் கீழ் கொண்டு வரும் என்ற பரந்துபட்ட சிந்தனை. 

2. ஜேர்மனிய 'ஆரிய' இனத்தின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக கருதுகின்ற ஏனைய இனங்களிலிருந்து 'சுதந்திரம்' அடைவதாகும். இச்சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே இரண்டாம் உலக யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு ஜேர்மனிய நாசிசவாதிகள் முற்பட்டனர்.


வன்முறையும் தீவிரவாத்ததையும்  (Terror)

அரசியல் அதிகார ஊடகமாக பயன்படுத்துதல்

பாசிச அரசின் அடிப்படைப் பண்பாக முழு சமூகத்தையும் தங்களது ஆதிபத்தியத்தின் கீழ் பலவந்தமாக உட்படுத்திக் கொள்வதாக இருந்தது.

தனது அதிகாரத்திற்கு உடன்படாத சகல சமூக / இனப் பிரிவினரையும் அடிமைப்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் உடலியல் ரீதியாக அழிவை ஏற்படுத்துவதற்கும் பாசிச வாதிகள் ஒழுங்கமைந்திருந்தனர்.


இன சுத்திகரிப்பு  (Genocide)

பாசிச அரசின் கடமை ஆக்கப்பட்டது.

பாசிசவாதத்துடன் உடனபடாத மக்களுக்கு இரு மாற்றுவழிகளே காணப்பட்டன. ஒன்று நாட்டை விட்டுச் செல்லுதல் அல்லது இன சுத்திகரிப்புக்கு உட்படுதல் என்பனவையே அவை.


யுத்தம் (War)

ஜனநாயக ஆட்சி முறையில் சகல சந்தர்ப்பங்களில் யுத்தமானது நிராகரிக்கப்பட்டிருந்தாலும் சோசலிச ஆட்சி முறையில் ஒரு கட்டத்தில் சகல சந்தர்ப்பங்களிலும் யுத்தமானது அனுமதிக்கப்பட்டிருக்கும் எனவே தான் இதனை பின்வருமாறு கூறுகின்றார்கள். 'யுத்ததினால் தோன்றி யுத்ததினால் வளர்ந்து யுத்ததினால் மறையும் அரசு'

பாசிசவாதிகள் 'சமாதானம் என்பது கோழைகளின் கனவு' என்கின்றனர். 

அத்துடன் இறைமை படைத்த எந்தவொரு நாடும் கட்டாயம் யுத்தம் செய்ய வேண்டும் என்கின்றார்கள். இறைமைப் படைத்த எந்தவொரு நபரும் எந்த ஒரு அரசும் யாருவருக்கும் கட்டுப்பட கூடாது என்கின்றனர். 

பாசிச அரசை ஒரு மரமாக உடுத்து கொண்டால் அதற்கு நீராக ஊற்றப்படுவது மனித இரத்தமாகும். பசளைகளாக இடப்படுவது எழும்புகளாகும். இவ்வாறு பாசிசத்தில் யுத்தமானது மேம்படுத்தி காட்டபடும்.

பாசிச தலைவர்களுள் முசொலினி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். எனக்கு கலை என்னும் சொல்லை கேட்டவுடன் துப்பாக்கியை எடுத்து சுழற்றும் எண்ணமும் தான் நினைவுக்கு வருகிறது.  யுத்தங்களே ஒரு மனிதனது ஆளுமையை வெளிப்படுத்துவதற்கு சிறந்த இடம் என்கின்றார்.

யுத்தம் செய்ய முடியாத நாடுகள் அனைத்தும் தேங்கி நிற்கும் நீருக்கும் சமம் என்கின்றார். இவ்வாறு பாசிசத்தில் யுத்தம் முதல் நிலைத்திருக்கும். யுத்ததினால் வளர்ந்து யுத்ததினால் மடியும் அரசு எனப்படுகின்றது. 

தாராள, சோசலிஸ்ட் தத்துவங்களுக்கு முரணானது.

பாசிசவாதி சோசலிசவாதிகளை தமது பிரதான எதிரிகளாக காணப்படுகின்றனர். சோசலிசவாதிகள் பொதுவுடைமையை வலியுறுத்துகின்ற பாசிசவாதிகள் நிராகரிக்கின்றனர்.

பாசிசம் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு ஆட்சி முறையாகும். ஜனநாயகம் பெருபான்மையோர் ஆட்சி என்ற தத்துவத்தை நிலைநிறுத்த பாசிமானது அதனை நிராகரிக்கின்றது. 

பாஸிஸ அரசில் எல்லா ஊடகங்களும் நாயகர் வழிபாட்டினை வெளிப்படுத்த வேண்டும். 

அரசியல் கட்சி, அமுக்கக்குழுக்கள் முழுமையாக தடைசெய்யப்படும்.

மக்களின் அரசியல் பங்குப்பற்றலை பாஸிஸவாதம் எதிர்க்கின்றது. 

அரச நிருவாக செயற்பாடுகள் முழுமையாக ஆட்சியாளனின் எதேட்சை அதிகாரத்தின் கீழ் நடைபெறும் 

அரசின் சட்டம் என்பது ஆட்சியாளனின் விருப்பங்களாகும்


இத்தாலிய பாசிசம்

முதலாம் உலகமகா யுத்ததில் இத்தாலி வெற்றி பெற்ற அணியில் காணப்பட்ட போதிலும் யுத்ததின் பின் செய்த கொள்ளப்பட்ட வேர்சாய் உடன்படிக்கையானத இத்தாலிய மக்கள் எதிர்ப்பார்த்தளவு நன்மைகளை பெற்றுத்தர தவறிவிட்டது. ஆத்துடன் இக்காலப்பகுதியில் இத்தாலியில் நிலவிய பொருளாதார மந்தம் சமுக சீர்கேடுகள் போர்களத்தில் இருந்து நாடு திரும்பிய இராணுவ வீரர்கள்pன் விரத்தியுற்ற மனநிலை என்பன போன்ற காரணிகளை இத்தாலியை மேலும் பல சிக்கலுக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் இத்தாலிய மக்கள் தமது நாட்டை புத்துயிர் பெற செய்ய புதியதொரு தலைவரை எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் 1882அம் ஆண்டு ஜீலை மாதம் 29ஆம் திகதி பிறந்த பெனிற்றே முசோலினி என்பவர் முன்னிலைக்கு வருகிறார.;

     இவர் ஒரு சாதாரண பத்திரிக்கையாளர். புhசிசவாதியான முசொலினி தமது முதலாவது கருத்தினை 1919 ஆம் ஆண்டு திலான் நகரில் வெளியிடுகின்றார். 1921ஆம் ஆண்டு பாசிச கட்சியை நிறுவினார். 1922ஆம் ஆண்டு காலப்பகுதியில் இத்தாலிய பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வேண்டும் எனவும் அடுத்த தேர்தலுக்காக திகதி குறிப்பிடப்பட வேண்டும் எனவுமு; அவ்வாறு இல்லாத பட்சத்தில் தான் இத்தாலிய அரசிற்கு எதிரான இத்தாலியின் புனித நகரான உரோம் நகரை நோக்கி ஊர்வலம் ஒன்றை செல்ல இருப்பதால் உச்சரிக்கின்றார். 

   இரரின் எச்சரிக்கையை அத்தாலிய அரசு பொருட்படுத்தாமையால் 1922 ஆம் ஆண்டு பிற்காலப்பகுதியில் தாம் திட்டப்படி சுமார் 2500 இராணுவ வீரர்களை தம்மொட அணைத்துக்கொண்டு இத்தாலிய அரசக்கு எதிரான ஊர்வலம் செல்கின்றார். முசொலினியின்  அச்செயற்பாடு  இத்தாலிய அரசுக்கு ஏற்பட்ட பெரும் இழுக்கு  என  கருதிய அப்போதைய ஜனாதிபதி 3ம் விக்டர் இமானுவேல் பாராளுமன்றத்தை கலைத்து முசொலினியை ஆட்சியமைக்க பணிக்கின்றார். 

   இவ்வாறு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய முசொலியனி முதலில்  தன்னை ஒரு ஜனநாயக்வாதியாக  காட்டிகொண்டு பின்னர் தமது சர்வதிகாரம் பாசிச ஆட்சியை நிறுவினார். ஆவ்வாட்சியானது 1922ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி வரை நீடித்தது. அதனால் முசொலினி கொலை செய்யப்பட்டதனை தொடர்ந்து அவ்வாட்சி முடிவுற்றது. 

ஜேர்மனிய பாசிசமும்

ஜேர்மனிய நாசிசவாத ஆட்சியாளரான அடொல்ப் கிட்லர் (யுனனழடிh ர்வைடநச) 1925 - 26 களில் அரசியல் சிறைக்கைதியாக இருந்தபோது வெளியிட்ட 'எனது போராட்டம்' (ஆநin முயஅpக) என்ற நூலில் பாசிசவாதத்தின் அடிப்படை மற்றும் நோக்கங்களை மிகவும் தெளிவாக எழுதியுள்ளார். முதலாம் உலகபோரில் ஜேர்மனி படுத்தோல்வி அடைந்தது அத்துடன் வெற்றியீட்டிய நாடுகளின் தலையீட்டினால் வெர்சல்ஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டிய தேவை ஏந்பட்டது.இக்கால பகுதியில் ஜேர்மனியில் வைமார் எனப்படும் கூட்டாட்சி முறை நிலவியது. இது ஜேர்மனியின் வளர்ச்சிக்கு பொருத்தமானதாக இருக்கவில்லை. வெர்சல்ஸ் உடன்படிக்கை மூலம் ஜேர்மனி பெரும்பாலான பணத்தை வெற்றியீட்டிய நாடுகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் ஜேர்மனியின் பொருளதாரமானது பாதுகாப்புக்குள்ளானது. 

    வைமார் எனப்படும் கூட்டாட்சி;யை நீடிக்க முடியாது என மக்கள் கருதினார்கள். இந்நிலையில்  இத்தாலிய மக்களை போன்று ஜேர்மனிய மக்களும் புதியோர் தலைமைத்துவத்தை எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போது 1889ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதி பிறந்த இட்லர். முண்ணனிக்கு வருகின்றது. 

கிட்லர் ஒரு இரும்பு உருக்குப்பட்றையில் சாதாரண தொழிலாளி. ஜேர்மனிய கட்டடாய இராணுவ பயிற்சியில் சேர்கப்பட்டார் பயிற்சிகாலத்திலும், யுத்தகாலத்திலும் இவர் காட்டிய ஆர்வத்தின் காரணமாக ஜேர்மனிய அரசு இரும்பு சிலுவை என்ற விருதை வழங்கி கௌரவித்தது. தமது நாவன்மையை பயன்படுத்தி இவர் மக்களை தம் பக்கம் ஈர்த்து எடுக்கிறார் ஜேர்மனியில் தற்போது நிலவும் வைமார் ஆட்சி ஜேர்மனிக்கு இலுக்கை ஏற்படுத்த கூடியது. ஏனவெ அது உடனடியாக தகர்த்து எறியபட வேண்டும். ஆத்துடன் 1ம் உலக மகா யுத்தின் போது ஜேர்மனி இழந்த இழப்பீடுகளை உடனடியாக ஈடு செய்ய வேண்டும். என்று மக்கள் மத்தியில் தேசப்பற்றை தூண்டிவிட்டார்.

1ம் உலகமகா யுத்ததின் பொழுது ஜேர்மனி தோல்வி அடைந்;தமைக்கு யூ10தர்களும்,  சோசலிஸ்டுகளும் காரணம் என கருதி அவர்களை நாட்டிலிருந்து அழிக்க வேண்டும் என கூறினார். தமது கொள்கையை பரப்புவதற்காக 1920 ஆம் ஆண்டு ஆண்டு ஜேர்மனிய தொழி;ற்கட்சியை நிறுவினார். பின்னர் அதனை தேசிய சோசலிச ஜேர்மனிய தொழிற்கட்சி என பொயர் மாற்றினார். 

1933ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கிட்லரின் நாசிச கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஜனநாயக ரீதியான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி ஈட்டிய கிட்லர் ஜேர்மனிய அதிமுக்கியமான பதவியான சான்சலர் பதவியை பெற்றுக்கொண்டார். 1934ஆம் ஆண்டு ஜனாதிபதியான கிடன்பேர்க் இறந்ததை தொடர்ந்து ஜனாதிபதி பதவியை பெற்றுக் கொண்டார். 

ஆட்சி அதிகாரத்தை பெற்றக்கொண்ட இட்லர் 1933ஆம் ஆண்டு தொடக்கம 1944ஆம் ஆண்டு வரை தமது ஆட்சி காலத்தில் ஜேர்மனிய பொருளாதார இரானுவ ரதீயான சக்திமிக்க நாடாக கட்டியெழுப்பினார். புல நாடுகளை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருகின்றார். 2ஆம் உலக மகா யுத்ததிலும் ஜேர்மனியை பங்கேற்க செய்தார். அதிலும் ஜேர்மனி படுதோல்வியடைந்தது. முசொலினி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தற்கொலை செய்து கொள்கிறார். அத்துடன் ஜேர்மனிய பாசிசம் முற்று பெறுகிறது. 

   1922ஆம் ஆண்டு இத்தாலியில் நிலவிய சூழ்நிலையையும் 1933அம் ஆண்டு: ஜேர்மனியில் நிலவிய சூழ்நிலையும் தமக்கு சார்பாக பயன்படுத்தி ஆரம்பத்தில் தம்மை ஜனநாயக வாதயாக காட்டி கொண்டு பின்னர் தமது  பாசிச ஆட்சியை  நிறுவியதால் பாசிச அட்சிமுறை 'ஒரு சந்தர்ப்பவாத ஆட்சி முறை' என்கின்றார். 

   




No comments:

Post a Comment